Tuesday 22 October 2013

மதத்தைக் காப்பாற்ற ..
மனித நேயத்தை மறக்கும்
மனம் இல்லா மனித ஜடங்கள்....
 

Saturday 12 October 2013


Live your life as a human

Loving,caring and kind,

Spreading the waves of joy and harmony,

Shredding behind the banners of caste,color and creed,

Fulfilling the divine purpose,which you are called for,

And thats what you are here for...............VAZHGA VALAMUDAN!


May you Live your life like a tree,

blooming brightly all through your ways,

branching out in all goodness of life,

bearing fruits of love and kindness,

bringing down showers of blessings upon the earth,

providing shade to the down- trodden and

deep rooted in knowledge and wisdom.
May you live your life like a bird,
breaking off the shell facing life with confidence,
colorful and cheerful like a parrot,
singing joyfully like a cuckoo,
sharing like a crow,
flocking like a Gull,
stately like a peacock,
flying above the clouds like an eagle on gloomy days,
and facing the marathon of life like an ostrich.....

May you LIVE your LIFE the way a flower does

slowly developing growing in to optimum

hence unfolding your colorful enchanting beauty

spreading the fragrance of love,

passing on wisdom as the flower spreads it pollens

multiplying the joy as the seeds,

smiling brightly never worrying about withering...

Friday 11 October 2013


இன்றைய கல்வி ....கேள்விக்குறியாகிப் போனது ஏனோ?

ஒழுக்கக் கல்வி எத்தனைப் பள்ளிகளில் உள்ளது?
எத்தனைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படுகிறோம்?

ஓரின சேர்கை விவகாரத்தில் பத்தாம் பத்தாம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவனை கழிவு நீர் தொட்டியில் தள்ளி கொன்ற சம்பவத்தைப் படிக்கும் போது மனம் பதைக்கிறது....எப்படி உருவகப் போகிறது எதிர்கால சந்ததி?

எனக்குத் தெரிந்த ஒரு மாணவனுக்கும் இது போல நடந்து இன்று படிக்க வேண்டிய பருவத்தில் மனநோயாளியாக அலைந்துக் கொண்டிருகின்றான்!

பெற்றோர்களே பொறுப்பு உங்கள் கையில்!
குழந்தைகளை விடுதிகளில் சேர்ப்பதை தவிருங்கள்!
உங்கள் நேரடி கண்காணிப்பின் கீழ் வளருங்கள்!
ஓரிரு குழந்தைகளை நம்மால் கவனித்து வளர்க்க முடியாத போது..எப்படிபல ஆயிரம் குழந்தைகளை விடுதிகளில் கண்காணிக்க முடியும்? இன்றய சூழ்நிலையில் பிள்ளைகளை கண்டிக்க முடியாத நிலையில் உள்ளனர் ஆசிரியர்கள்.

புற்றீசல் போல்  முளைத்து ஆல் போல் தழைத்து வளர்ந்துள்ள 'தனியார் கல்வி தொழிற் சாலைகள்'  உருவாக்குவது மாணவர்களை அல்ல...'மதிப்பெண் பெரும் இயந்திரங்களை 'தான்.பெற்றோர்களும்      இத்தகைய கல்வி நிறுவனங்களையே நாடுவது கொடுமையிலும் கொடுமை!

தனியார் கல்லூரிகளில் நிர்வாகத்திற்கு பணம்கொடுத்து விட்டு மாணவர்கள் ஆசிரியர்களை அடிக்கலாம் எனும் நிலையும் உள்ளது. ..இது கொலை வரை கொண்டு சென்றதில் ஆச்சரியம் இல்லையே!

ஒழுக்க கல்வி மூலம் குழந்தைகள் மனதை பண்படுத்துவதன் மூலமே எதிர்காலம் ஒளிபெறும்..மதிப்பெண்ணா? ..நல்ல மனிதனா? ஏது வேண்டும் உங்களுக்கு? சிந்திப்போம்!

Wednesday 9 October 2013

வானம் எட்டிவிடும் தூரம் தான்!

வடிக்கட்டுவோம் வாழ்வில்...
எதிர்மறை எண்ணம்,சோம்பல்,முயற்சின்மையை!!

படிகட்டுவோம் வாழ்வில் ..
நல்லெண்ணம்,செயல், முயற்சியால் !!

கொடிக்கட்டுவோம் வாழ்வில்..
வெற்றி,வெற்றி,வெற்றியே!!!

Sunday 22 September 2013

கடவுள் எங்கே!

கடவுள் உலகைப் படைத்தானா?
கடவுளுக்கு  உடலும்  இல்லை, குடலும் இல்லை,
தேவையும் இல்லை,  ஆசையும் இல்லை,
படைப்பதற்கான காரணம்தான் என்ன?

கடவுள் உலகைப் படைத்திருந்தால்...?
இன்று மானுடம் படும் துன்பங்களைக் கண்டு
வாளாதிருக்கும் கொடியவனோ அவன்?
இல்லைப் படைப்பாற்றல் தான்
போய்விட்டதோ அவனை விட்டு?

இன்னும் கொஞ்சம் விலை நிலங்களை படைக்கட்டுமே,
நீரை இன்னும் படைக்கட்டுமே,உணவைப் படைக்கட்டுமே,
படைத்தவனுக்கே படைக்கும் மனிதா..........?
உன் துன்பத்தையும் படைத்தவன் கடவுளோ?




செய்ய வேண்டியதை
செய்ய வேண்டிய முறைப்படி
செய்ய வேண்டியக் காலத்தில்
செய்ய வேண்டியவருக்கு
செய்வதால் ஆனந்தம் ஏற்படும்-
அதுவே தர்மம்!
வாழ்க வளமுடன்!

Sunday 15 September 2013

என்னால் முடியும் என்பது-வெற்றியின் முதல் படி
என்னால் மட்டுமே முடியும் என்பது-வீழ்ச்சியின் முதல் படி!

எனக்கு தெரியும் என்பது - தெளிவு
எனக்கு மட்டுமே தெரியும் என்பது - மடமை!

என்னை எனக்கு தெரியும் என்பது - அறிவு
நானே எங்கும் எதிலும் அனைத்துமாய் உள்ளேன் என்பது - பேரறிவு!

Monday 2 September 2013

உலகமயமாக்கல்...........எதில்?

மிருகத்தின் கால் வழியே சந்தர்ப்பத்தால்
மிகச் சிறிய மாறுதலைப் பெற்று முன்னும்
ஒரு மனிதன் தோன்றி அவன் வித்தின் மூலம்
உருவான பெருக்கம்தாம் உலக மக்கள்.
பெரு வெள்ளம் கடல் இவை இந்நிலப் பாகத்தைப்
பிரிக்க அடிக்கடிச் சிதறிப் பிரிந்தார் மக்கள்
உருவம் உள்ளம் இரு நிலைகளியக்கம் கண்டால்
ஒரு குடும்பமே உலக மக்கள் எல்லாம்.-வேதாத்ரி மகரிஷி.

                         
வர்த்தக ரீதியாக உலகமயமாக்கல் என்பது சுரண்டலுக்கு தான் வழிவகுக்குமே அல்லாமல் சமத்துவதை ஏற்படுத்தாது.
வர்த்தக ரீதியாக பிற நாடுகளை நம்நாட்டில் அனுமதித்தால் நம் நாட்டு வர்த்தகம் பதிக்கப்படும்,மக்கள் வளம் சுரண்டப்படும்.

நாடு விடுதலைப் பெற்று ஒரு நூற்றாண்டுக்கூட முடியாத நிலையில் கிழக்கிந்திய கம்பனியினர் இந்தியாவிற்குள் எதற்கு வந்தனர் என்பதை மறந்து விட்டோமா?

உலகில் எந்த நாட்டிலாவது இந்தியர்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா?

மனித இனத்தின் அதி பயங்கர எதிரி மனிதனே.தன் இனத்தைத் தானே அழிக்கத் துடிக்கும் ஓர் கேவலமான சுயநல வாதியாகிவிட்ட மனிதனிடம் உலகமயமாக்கல் எப்படி சாத்தியம்?

உணர்வுகள் உலகமயமாக்கப்பட வேண்டும்.மனதில் அனைவரும் ஓரினம் எனும் எண்ணம் மலரவேண்டும்.

மனம் மலர்ந்து ஒன்றுப்படவேண்டும். மொழி,நிறம்,கலை,உணவு,வேறுப்பட்ட போதிலும் அனைவரும் மனிதரே என்னும் மனித நேயம் வளரவேண்டும்.அது இல்லையேல் இந்த வர்த்தக ரீதியான உலகமயமாக்கல் அழிவுக்கு வழிவகுக்கும்.



ஞாயிறு ஒளியால் நலமே பெருகட்டும்...
இனிய திங்கள் வெண்நிலவாய் மலரட்டும்...
செவ் வாய் மலர்ந்து சிறந்து விளங்கட்டும்....
புதன் பசுமை நிறைந்த நாளாகட்டும்....
வியாழன் குருவருளால் பொன்னாள் ஆகட்டும்....
வெள்ளி விடிவெள்ளியாக சிறப்புடன் ஒளிரட்டும்....
சனி சிந்தனையை உயர்த்தி வாழ்வின் இருளை அகற்றட்டும்...
வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!

Wednesday 28 August 2013


உரிமை..உரிமை...உரிமை
உரிமை என்பது..
எடுப்பதும் அல்ல
கொடுப்பதும் அல்ல
கேட்டு பெறுவதும் அல்ல
உரிமை என்பது இருப்பது....

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தின் மீதும்
அனைவருக்கும் உண்டு உரிமை..
மூச்சுக் காற்றை அனுபவிக்க,
கதிரவனில் ஒளியை அனுபவிக்க,
மழையின் வளத்தை அனுபவிக்க,
குயிலின் பாட்டை அனுபவிக்க,
நிலவின் இதத்தை அனுபவிக்க,
மலரின் மணத்தை அனுபவிக்க,
உரிமையைக் கேட்டாப் பெற்றுக்கொண்டோம்?

உரிமை என்பது அனைவருக்கும் உண்டு.....

ஆனால் உன் உரிமை பிறர் உரிமையைப் பறிக்காதவரை....

Thursday 22 August 2013

ஆன்மீக தேடல்!

ஆன்மீக தேடல் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும் ஒரு உள்ளுணர்வாகும்.மதங்களும் சமயங்களும் அந்த தேடலுக்கு கிடைத்த விடையே!

எந்த ஒரு மதத்தினை எடுத்துக்கொண்டாலும் இரு முக்கிய கருத்துக்களைத் தான் வலியுருத்துகின்றன.

1. அற நெறி 2. இறைவழிப்பாடு

அற நெறி – வாழ்கை நல நெறிகள் – அன்பு,கடமை,ஒழுக்கம்,ஈகை,கற்பு,உயர்வு தாழ்வு அற்ற மன நிலை முதலியன.

இறைவழிப்பாடு - இயற்கையை உணர்ந்து மதித்து வாழ்வது.

பொதுவாக ஒருவர் எந்த மதத்தினை சார்ந்த குடும்பத்தில் பிறக்கின்றாறோ அந்த மதத்தை பின்பற்றுவது இயல்பு.

கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப் பார் நீ
கருத்தேக் கடவுளாய் நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே. (வேதாத்திரி மகரிஷி)

அந்த மதத்தை உயர்வாக நினைப்பதும் மற்ற மதங்களை இழிவாக நினைப்பதும் மனித மாண்பு அன்று.

மதங்களின் பெயரால் சகமனிதர்களை எதிரியாக பார்க்கும் இயல்பினை மாற்றுவோம்.

'உம்மதமே பெரிதென்று பேசுகின்றீர்
எம்மதத்தில் இல்லை ஏழ்மை பஞ்ச மா பாதகங்கள்?'.(வேதாத்திரி மகரிஷி)

எந்த மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றும் உரிமை எல்லாருக்கும் உண்டு..ஆனால் மதம் மாற்றும் உரிமையை யார் கொடுத்தது?

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.

Wednesday 21 August 2013

சிந்திக்க...

நான்..
உனக்கு பிடித்த நபர் யார் என்று
உன் உள்ளத்தைக் கேட்டு பார்
உன் உள்ளம் சொல்லும்
அது 'நான்' என்று......

தனக்காக வாழ்வது சுய நலம் எனில்
'சுயம்' நலம் இல்லையேல்
பொது நலம் ஏது?
'நான்' விழைவது தானே பொது நலம்?

வீடு,மனைவி,மக்கள்,குடும்பம்
நட்பு,காதல்,புணர்ச்சி,இன்பம்
ஏன் மரணத்தில் கூட மேலோங்கி நிற்பது
நான்,நான்,நான்,தானே...



அழகான பொய்கள் சொன்னாய்..
அதனால் என்னை வென்றாய்..!
உன் பொய்களோடு என் பொய்களும்....
பொய்களை மெய் ஆக்க...
மெய்கள் ஏங்கினாலும்
மெய்யான வாழ்வில் பொய்கள்
பொய்யாக இருக்கும் வரை சுகமே...

Tuesday 20 August 2013

BECOME AS A CHILD....

When a child is born
Its knowledge is nil.
It does not even know its mother,
Cannot stand,
Its helpless,
But it feels secure....Trust is total.

when it grows knowledge increase,
Desire increases,
helplessness decreases
Insecurity increases..trust is gone .
Problems start......Happiness is GONE!
என் வாழ்வில் பாபாவின் அற்புதங்கள்...!
1
எனக்கு அதுவரை சீரடி பாபாவிடம் பெரிதாக ஈர்ப்பு இருந்ததில்லை...சிலமாதங்களாக என் பெரிய மகன்
பாபாவின் பால் இழுக்கப்பட்டு அவரை வணங்க ஆரம்பித்தான் .நானும் என் மகனுடன் சேர்ந்து வணக்க ஆரம்பித்தேன்.பின் சீரடி செல்ல வேண்டும் என ஓர் உந்துதல். எனவே நானும் அவனும் அவனது நாண்பன் ஒருவனுடன் சீரடி பயணமானோம்.

ஈரோடில் இருந்து சென்னைக்கு காரில் பயணம்.. பின் அங்கிருந்து புனேக்கு விமானத்தில் செல்ல காரில் பயணித்தோம்.கார் சேலம் தாண்டி சிறிது தொலைவு
சென்றிருக்கும்.....கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதியது
.கார் படத்தை பாருங்கள்....ஆனால் மோதியது லாரி ஓட்டுனருக்கு கூட தெரியவில்லை அவர் சென்றுவிட்டார்..கார் ஓட்டியது என் மகன் அருகில் நான் ..எங்கள் இருவருக்கும் ஒரு அதிர்வு கூட இல்லை.இறங்கி வாகனத்தை பார்த்த போழ்து தான் அதிர்ச்சி ...பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்ப நினைத்தோம்.ஆனால் என்மகன் சொன்னது.......

பாபா நேரில் வந்து லாரிக்கும் காருக்கும் இடையே கை வைத்தது போல் உணர்ந்தேன் எனவே நாம் பயணத்தை தொடரலாம் என்றான்.

காரை கட்டி இழித்து செல்லும் வண்டியில் ஈரோடு அனுப்பி விட்டு டாக்ஸ்யில் சென்னை சென்றோம் ...
இதற்கு பின் இன்றுவரை ஒவ்வொரு நாளும் அனுபவங்கள் பல பல ..
தினமும் ஒன்றாக பதிவிடுகிறேன் .சீரடியில் ஏற்பட்ட அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கும் ....ஜெய் சாய் ராம்.
புத்தம் புது பூமி வேண்டும்!

சாதி அழியட்டும் !
மதம் அழியட்டும் !
அகங்காரம் அழியட்டும் !
தான் தனது என்னும் கடும் பற்று அழியட்டும்!
தேசங்களின் எல்லை கோடுகள் அழியட்டும் !
சுய நலம் அழியட்டும் !

புதிய உலகம் மலரட்டும்!!!


பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்ன பெருமை
இதை விட எடுத்து பேசுவதற்கு. வேதாத்ரி மகரிஷி.

உலக மக்களின் உடல்லில் ஓடுகின்ற இரத்தம் பெண்மையின் அன்பளிபல்லவா?

உலகில் உள்ள ஒருவரேனும் பெண்ணில்லாமல் தோன்றியுள்ளனரா?

ஏசுநாதர் கூட ஆண் கலப்பு இல்லாமல் பிறந்தார் என்று கூறப்படுகிறதே தவிர பெண் இல்லாமல் தோன்றவில்லையே?

ஆனால் இத்தகையசிறப்பு வாய்ந்த பெண்மை ஒரு காட்சிப்பொருளாகவும்,போகப் பொருளாகவும் உள்ள அவல நிலை மாற வேண்டும்.

நாகரிக வளர்ச்சியே இல்லத, உடையே அணியாத பழங்குடி மக்களிடம் பெண்களை கவர்ச்சிப் பொருளாக பார்க்கும் நிலை இல்லையே?

இயற்கை பிரபஞ்சதில் உள்ளஒவ்வொருப் பொருளையும் தன் பரிணாம வளர்ச்சியினால் நேரடியாக தந்துள்ளது.எனினும் உயரினங்களின் தோற்றம், காப்பு இவற்றைப் பெண்மையிடத்தே ஒப்புவிதுள்ளது.

பெண் வயற்றில் உருவாகி மேலும் அந்த பெண் பால் உண்டே வளர்ந்தோம்.பெண்ணின் பெருமை உணர்.........

இந்த மாற்றம் நம் ஒவ்வொவொருவர் மனதிலும் அல்லவா ஏற்பட வேண்டும்?

மண் ஆசை,பொன் ஆசை,பெண் ஆசை என்று பெண் ஜடப்பொருள்களின் வரிசையில் அல்லவா சேர்க்கப்படுகிறாள்.

மனித இனத்தின் ஒவ்வொரு தனி நபரும் ஆண் பெண் இருபாலரின் இயல்புகளையும் சேர்ந்தே பெற்றுள்ளோம்.

தண்டனையினாலோ ,சட்டத்தினாலோ உலகை சீர் திருத்த முடியாது.அறிவிலே உயர வேண்டும் உணர வேண்டும்.வளரும் குழந்தைகள் மனதில் ஒழுக்கம் விதைக்கப் பட வேண்டும்.மனம் செம்மையாக வேண்டும் வேண்டும் வேண்டும்!!!!!!!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!