Monday 17 November 2014

வாழ விடு...திரும்பி போ இந்திய இறையாண்மை நோக்கி ..

நதிகள் புனிதம் என்றோம்...
இல்லை அவை வெறும் நீர் நிலைகள் தான்  என்றாய்...
புனிதம் இழந்த நதிகளால் வாழ்விழந்தது யார்?

மரங்களை வணங்கினோம் வாழ்வாதாரமாய்....
அவை வெறும் மரங்களே என வெட்டி வீழ்த்தினாய் ..
மழை வரமின்றி வாழ்விழந்தது யார்?

மண்ணை மாதா என்றோம் ....
குழாய் பதித்து உறிஞ்சினாய்...
நீரை மட்டுமா?மீத்தேனையும் தான்..
தாங்குமா பூமி?

பெண்மையை வணங்கினோம் தெய்வமாக ...
அவர்களை வெறும் சதையாகக் கண்டாய்...
இனி பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை யார் என்று அறியா நிலைவரலமோ? (முத்த போராட்டமாமே)

இந்திய இறையாண்மையை
கேள்வி கேட்கும் அறிவாளிகளே...
போதும்.....................
 நிறுத்திக்கொள்ளுங்கள் உங்கள் விதண்டா வாதத்தை ....
இனிவரும் சந்ததியினர் வாழ வழி விடுங்கள்...