Sunday 22 September 2013

கடவுள் எங்கே!

கடவுள் உலகைப் படைத்தானா?
கடவுளுக்கு  உடலும்  இல்லை, குடலும் இல்லை,
தேவையும் இல்லை,  ஆசையும் இல்லை,
படைப்பதற்கான காரணம்தான் என்ன?

கடவுள் உலகைப் படைத்திருந்தால்...?
இன்று மானுடம் படும் துன்பங்களைக் கண்டு
வாளாதிருக்கும் கொடியவனோ அவன்?
இல்லைப் படைப்பாற்றல் தான்
போய்விட்டதோ அவனை விட்டு?

இன்னும் கொஞ்சம் விலை நிலங்களை படைக்கட்டுமே,
நீரை இன்னும் படைக்கட்டுமே,உணவைப் படைக்கட்டுமே,
படைத்தவனுக்கே படைக்கும் மனிதா..........?
உன் துன்பத்தையும் படைத்தவன் கடவுளோ?




செய்ய வேண்டியதை
செய்ய வேண்டிய முறைப்படி
செய்ய வேண்டியக் காலத்தில்
செய்ய வேண்டியவருக்கு
செய்வதால் ஆனந்தம் ஏற்படும்-
அதுவே தர்மம்!
வாழ்க வளமுடன்!

Sunday 15 September 2013

என்னால் முடியும் என்பது-வெற்றியின் முதல் படி
என்னால் மட்டுமே முடியும் என்பது-வீழ்ச்சியின் முதல் படி!

எனக்கு தெரியும் என்பது - தெளிவு
எனக்கு மட்டுமே தெரியும் என்பது - மடமை!

என்னை எனக்கு தெரியும் என்பது - அறிவு
நானே எங்கும் எதிலும் அனைத்துமாய் உள்ளேன் என்பது - பேரறிவு!

Monday 2 September 2013

உலகமயமாக்கல்...........எதில்?

மிருகத்தின் கால் வழியே சந்தர்ப்பத்தால்
மிகச் சிறிய மாறுதலைப் பெற்று முன்னும்
ஒரு மனிதன் தோன்றி அவன் வித்தின் மூலம்
உருவான பெருக்கம்தாம் உலக மக்கள்.
பெரு வெள்ளம் கடல் இவை இந்நிலப் பாகத்தைப்
பிரிக்க அடிக்கடிச் சிதறிப் பிரிந்தார் மக்கள்
உருவம் உள்ளம் இரு நிலைகளியக்கம் கண்டால்
ஒரு குடும்பமே உலக மக்கள் எல்லாம்.-வேதாத்ரி மகரிஷி.

                         
வர்த்தக ரீதியாக உலகமயமாக்கல் என்பது சுரண்டலுக்கு தான் வழிவகுக்குமே அல்லாமல் சமத்துவதை ஏற்படுத்தாது.
வர்த்தக ரீதியாக பிற நாடுகளை நம்நாட்டில் அனுமதித்தால் நம் நாட்டு வர்த்தகம் பதிக்கப்படும்,மக்கள் வளம் சுரண்டப்படும்.

நாடு விடுதலைப் பெற்று ஒரு நூற்றாண்டுக்கூட முடியாத நிலையில் கிழக்கிந்திய கம்பனியினர் இந்தியாவிற்குள் எதற்கு வந்தனர் என்பதை மறந்து விட்டோமா?

உலகில் எந்த நாட்டிலாவது இந்தியர்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா?

மனித இனத்தின் அதி பயங்கர எதிரி மனிதனே.தன் இனத்தைத் தானே அழிக்கத் துடிக்கும் ஓர் கேவலமான சுயநல வாதியாகிவிட்ட மனிதனிடம் உலகமயமாக்கல் எப்படி சாத்தியம்?

உணர்வுகள் உலகமயமாக்கப்பட வேண்டும்.மனதில் அனைவரும் ஓரினம் எனும் எண்ணம் மலரவேண்டும்.

மனம் மலர்ந்து ஒன்றுப்படவேண்டும். மொழி,நிறம்,கலை,உணவு,வேறுப்பட்ட போதிலும் அனைவரும் மனிதரே என்னும் மனித நேயம் வளரவேண்டும்.அது இல்லையேல் இந்த வர்த்தக ரீதியான உலகமயமாக்கல் அழிவுக்கு வழிவகுக்கும்.



ஞாயிறு ஒளியால் நலமே பெருகட்டும்...
இனிய திங்கள் வெண்நிலவாய் மலரட்டும்...
செவ் வாய் மலர்ந்து சிறந்து விளங்கட்டும்....
புதன் பசுமை நிறைந்த நாளாகட்டும்....
வியாழன் குருவருளால் பொன்னாள் ஆகட்டும்....
வெள்ளி விடிவெள்ளியாக சிறப்புடன் ஒளிரட்டும்....
சனி சிந்தனையை உயர்த்தி வாழ்வின் இருளை அகற்றட்டும்...
வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!