Tuesday 20 August 2013

பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்ன பெருமை
இதை விட எடுத்து பேசுவதற்கு. வேதாத்ரி மகரிஷி.

உலக மக்களின் உடல்லில் ஓடுகின்ற இரத்தம் பெண்மையின் அன்பளிபல்லவா?

உலகில் உள்ள ஒருவரேனும் பெண்ணில்லாமல் தோன்றியுள்ளனரா?

ஏசுநாதர் கூட ஆண் கலப்பு இல்லாமல் பிறந்தார் என்று கூறப்படுகிறதே தவிர பெண் இல்லாமல் தோன்றவில்லையே?

ஆனால் இத்தகையசிறப்பு வாய்ந்த பெண்மை ஒரு காட்சிப்பொருளாகவும்,போகப் பொருளாகவும் உள்ள அவல நிலை மாற வேண்டும்.

நாகரிக வளர்ச்சியே இல்லத, உடையே அணியாத பழங்குடி மக்களிடம் பெண்களை கவர்ச்சிப் பொருளாக பார்க்கும் நிலை இல்லையே?

இயற்கை பிரபஞ்சதில் உள்ளஒவ்வொருப் பொருளையும் தன் பரிணாம வளர்ச்சியினால் நேரடியாக தந்துள்ளது.எனினும் உயரினங்களின் தோற்றம், காப்பு இவற்றைப் பெண்மையிடத்தே ஒப்புவிதுள்ளது.

பெண் வயற்றில் உருவாகி மேலும் அந்த பெண் பால் உண்டே வளர்ந்தோம்.பெண்ணின் பெருமை உணர்.........

இந்த மாற்றம் நம் ஒவ்வொவொருவர் மனதிலும் அல்லவா ஏற்பட வேண்டும்?

மண் ஆசை,பொன் ஆசை,பெண் ஆசை என்று பெண் ஜடப்பொருள்களின் வரிசையில் அல்லவா சேர்க்கப்படுகிறாள்.

மனித இனத்தின் ஒவ்வொரு தனி நபரும் ஆண் பெண் இருபாலரின் இயல்புகளையும் சேர்ந்தே பெற்றுள்ளோம்.

தண்டனையினாலோ ,சட்டத்தினாலோ உலகை சீர் திருத்த முடியாது.அறிவிலே உயர வேண்டும் உணர வேண்டும்.வளரும் குழந்தைகள் மனதில் ஒழுக்கம் விதைக்கப் பட வேண்டும்.மனம் செம்மையாக வேண்டும் வேண்டும் வேண்டும்!!!!!!!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


No comments:

Post a Comment