Tuesday 20 August 2013

என் வாழ்வில் பாபாவின் அற்புதங்கள்...!
1
எனக்கு அதுவரை சீரடி பாபாவிடம் பெரிதாக ஈர்ப்பு இருந்ததில்லை...சிலமாதங்களாக என் பெரிய மகன்
பாபாவின் பால் இழுக்கப்பட்டு அவரை வணங்க ஆரம்பித்தான் .நானும் என் மகனுடன் சேர்ந்து வணக்க ஆரம்பித்தேன்.பின் சீரடி செல்ல வேண்டும் என ஓர் உந்துதல். எனவே நானும் அவனும் அவனது நாண்பன் ஒருவனுடன் சீரடி பயணமானோம்.

ஈரோடில் இருந்து சென்னைக்கு காரில் பயணம்.. பின் அங்கிருந்து புனேக்கு விமானத்தில் செல்ல காரில் பயணித்தோம்.கார் சேலம் தாண்டி சிறிது தொலைவு
சென்றிருக்கும்.....கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதியது
.கார் படத்தை பாருங்கள்....ஆனால் மோதியது லாரி ஓட்டுனருக்கு கூட தெரியவில்லை அவர் சென்றுவிட்டார்..கார் ஓட்டியது என் மகன் அருகில் நான் ..எங்கள் இருவருக்கும் ஒரு அதிர்வு கூட இல்லை.இறங்கி வாகனத்தை பார்த்த போழ்து தான் அதிர்ச்சி ...பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்ப நினைத்தோம்.ஆனால் என்மகன் சொன்னது.......

பாபா நேரில் வந்து லாரிக்கும் காருக்கும் இடையே கை வைத்தது போல் உணர்ந்தேன் எனவே நாம் பயணத்தை தொடரலாம் என்றான்.

காரை கட்டி இழித்து செல்லும் வண்டியில் ஈரோடு அனுப்பி விட்டு டாக்ஸ்யில் சென்னை சென்றோம் ...
இதற்கு பின் இன்றுவரை ஒவ்வொரு நாளும் அனுபவங்கள் பல பல ..
தினமும் ஒன்றாக பதிவிடுகிறேன் .சீரடியில் ஏற்பட்ட அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கும் ....ஜெய் சாய் ராம்.

No comments:

Post a Comment