Wednesday 28 August 2013


உரிமை..உரிமை...உரிமை
உரிமை என்பது..
எடுப்பதும் அல்ல
கொடுப்பதும் அல்ல
கேட்டு பெறுவதும் அல்ல
உரிமை என்பது இருப்பது....

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தின் மீதும்
அனைவருக்கும் உண்டு உரிமை..
மூச்சுக் காற்றை அனுபவிக்க,
கதிரவனில் ஒளியை அனுபவிக்க,
மழையின் வளத்தை அனுபவிக்க,
குயிலின் பாட்டை அனுபவிக்க,
நிலவின் இதத்தை அனுபவிக்க,
மலரின் மணத்தை அனுபவிக்க,
உரிமையைக் கேட்டாப் பெற்றுக்கொண்டோம்?

உரிமை என்பது அனைவருக்கும் உண்டு.....

ஆனால் உன் உரிமை பிறர் உரிமையைப் பறிக்காதவரை....

No comments:

Post a Comment