Saturday 21 November 2015

கந்த சஷ்டி கவசம் ...பாகம்.2.


ஆறுமுகத்தோடு என்னுள்ளும், என்னிடத்தும் எழுதருள செய்த எம் பெருமானை என் வசனம் அசைவுள்ள வரையில் அதாவது என் உயிர் உள்ளவரை என்னுடன் இருந்து என் முன்னும் பின்னும் எக்காலத்தும் எபோழ்த்தும் என்னை காக்கும் படி வேண்டும் வரிகள் பின்வருவன.இதனால் என் மன தைரியம் பெருகி எப்போழ்தும் என்னை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் உள்ள உணர்வு பெருகும் நிலையை உணரலாம்...

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க        ... ... 100

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க


அடுத்து ...இன்று பலருக்கும் இருக்கும் பயம் "செய்வினை" செய்வினை பில்லி சூனியம் இருக்கா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும் ..அதனால் பயந்து எப்பொழதும் புலம்புபவர்கள் பலர் உள்ளனர்.

செய்வினை என்பதில் இருந்தே புரிந்துக்கொள்ள வேண்டும் நாம் தீய வினை புரிதிருந்தால் மட்டுமே அது செயல் படும் என்று.மற்றும் இங்கு அய்யா அவர்களின் வரிகள் அது நம்மை அணுகாது என்று உறுதி அளிக்கும் விதமாக உள்ளது. 
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ...:"என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட" அதாவது கருத்துடன் முருகபெருமானை தியானித்து அவனை என்னுள் எழுந்தருள செய்த என் பெயர் சொல்லவும்...
எத்தனை அருமையான உணர்வு பாருங்கள்..

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்        ... ... 110

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்        ... ... 115

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்        ... ... 120

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்        ... ... 125

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட        ... ... 130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய        ... ... 135

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்        ... ... 140


பிறகு கொடிய விலங்குகளை கூர் வடிவேலால் குத்த சொல்லும் வரிகள்.
இங்கு நான் எடுத்துக்கொள்வது என்னுள் இருக்கும் கொடிய விலங்கின கர்ம பதிவுகள் வடிவேலின் வேலால் குத்தப் படட்டும் என்பது.என்னுள் இருக்கும் விஷம்,கோபம்,வெறி போன்ற குணங்கள் நீங்க வேல் அருள் புரியட்டும்.
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட        ... ... 145

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்        ... ... 150


கொடிய நோய்கள் என்னை அணுகாதிருக்க காப்பு..
நோய் வருவதற்கு எதிர்ப்பு சக்தி இன்மை காரணமாகக் கூறப்படுகிறது.எதிர்ப்பு சக்தி உணவால் மட்டுமே வரும் என்பது ஏற்புடையதல்ல.நல்ல உணவு உண்பவர்களுக்கு நோய் வருவதில்லையா?

'மன பயிற்சியே எதிர்காலத்தின் மருந்து ' என்பார் புத்தர்.

மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அனைவரும் நம்புவது இறைவனை.அப்படி இருக்க ஏன் நோய் வரும் முன்னே வராது என அவனருளை நம்பலாமே.அந்த உறுதிப்பாட்டை அளிக்கும் விதமாக பின் வரும் வரிகளை பாராயணம் செய்து உலகில் நோய் இன்றி வாழ வழிவகுக்கிறார்.
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்        ... ... 150

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்        ... ... 155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்......
தொடரும்.

4 comments:

  1. என்னுள் இருக்கும் கொடிய விலங்கின கர்ம பதிவுகளாகிய விஷம் கோபம் வெறி போன்ற குணங்கள் நீங்க வடிவேல் அருள் புரியட்டும். அழகான விளக்கம்.

    ReplyDelete
  2. என்னுள் இருக்கும் கொடிய விலங்கின கர்ம பதிவுகளாகிய விஷம் கோபம் வெறி போன்ற குணங்கள் நீங்க வடிவேல் அருள் புரியட்டும். அழகான விளக்கம்.

    ReplyDelete