Tuesday 13 September 2016

சிவோஹம்



ஒன்றேயாம் சிவம்

இரண்டாம் சிவ சக்தியாகி

மூன்று மூர்த்திகளாய் மூன்று சக்திகளாய்(இச்சா,க்ரியா,ஞான)

நான் மறை வேதங்களாய்,

பஞ்ச பூதங்களாய்,பஞ்ச இந்திரியங்கள் உணர் பஞ்ச தன் மாத்திரைகளாய்,

ஆறு சக்கரத்துள் எழும் குண்டலினியாய் ,

ஏழு ஸ்வரங்களுள் நாதமாய்

அஷ்டமா சித்திகளாய் அஷ்ட திக்கெங்கும் நிறைந்து,

ஒன்பது வாயில் மாந்தர் உள்ளத்து உணர் மெய்ப்பொருளாய்,

பூஜ்ஜியமாய் என்னை உன்னுள் அடக்கி,

எல்லையில்லா ஆனந்தமாய் அனந்தமாய் என்னுள் நிறைந்தவனே...சிவோஹம்.

....அம்ருத்.




































No comments:

Post a Comment