Wednesday, 2 April 2014

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி.....
பாடினான் பாரதி அன்று...அவன் கண்ட கனவு நனவாகியது இன்று!

ஆனால் தரமான கல்வியை தரும் பள்ளிகள் தான் இல்லை..

வானுயரக்கட்டிடங்கள்...அழகிய வாகனங்கள்...குளிர்சாதன வசதிகள் கொண்ட படிப்பறைகள்..கணினி தொழில் நுட்பத்துடன் வகுப்பறைகள்....

யோகா ..வாய்ப்பாட்டு,கராத்தே,நீச்சல் எனும் விளம்பரங்கள்..

பலவகையில் பணத்தை பிடுங்கும் யுக்திகள்...

ஆனால் எந்த பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் உள்ளார்கள்.?
ஒழுக்கக் கல்வி உண்டா?

சமசீர் கல்விமுறை அமலுக்கு வந்தும் தங்கள் பெயரில் மெட்ரிக் பள்ளி எனும் பெயரை ஓட்ட வைத்திருக்கும் கொள்ளை கும்பல் ..

இன்று பெரும்பாலான சிறந்த ஆசிரியர்கள் அரசு பள்ளிகளிலேயே உள்ளனர்.ஆனால் சிறந்த மாணவர்கள் அவர்களுக்கு கிடைபதில்லை.

பெற்றோர்களுக்கு தேவை...மதிப்பெண் முட்டை போடும் broiler கோழி பண்ணைகள்...

மாணவர்களின் எதிர்காலம்....?
கல்வி முறையில் மற்றம் வேண்டும்....செய்வார்களா? சொல்லுங்கள் மக்களே செய்வார்களா?
 —

Wednesday, 19 March 2014

ஆசை !ஆசை! ஆசை!

ஆசையுள்ள விந்து நாதமே 
மனித உயிர் ஆனது. 
ஆசையின் உந்து வேகமே 
மனித உடல் எடுத்தது .
ஆசையால் வந்த வேகமே 
எழுந்து நிற்க செய்தது. 
ஆசையின் எழுச்சியால் தான் 
வாழ்க்கை ஓட்டம் தொடருது. 
ஆசை நிறைவேறினால் மனம் 
வேறொன்றில் நாட்டம் கொள்ளுது.

உயிரோடு வந்த ஆசை
உயிரோடு தான் போகுமோ?
ஆசை நிராசை ஆவது
திசை மாறியதால் தான் அன்றோ?
உயிரின் நோக்கம் உணர்ந்திடில்
ஆசை நிறை மனம் ஆகாதோ? 

Friday, 21 February 2014

தமிழே அமுதே !
அழகிய தமிழ் வாழ்க! 

எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு எம் தாய் மொழியாம் தமிழுக்கு உண்டு.
தமிழில் உள்ள சிறப்பு ‘ழ’கரம் நம் அழகிய தமிழுக்கு சிகரம்!

நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தி தான் “ழ” வை சொல்ல முடியும் இதனை.நவின் நுனியை மேல் அண்ணத்தில் ஆழ்த்தும் போது மூளைக்குள்ளாக இருக்கும் பினியல் சுரப்பி தூண்டப்பட்துகிறது.

"principal seat of the soul" என்று வழங்கப்படும் பீனியல் சுரப்பி உடல்,மனம் மற்றும் ஆன்மிக அறிவை மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

”உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்

வைத்த விளக்கும் எரியுதடி

அச்சுள்ள விளக்கு வாலையடி அவி

யாமலெரியுது வாலைப் பெண்ணே” - என்று கொங்கன சித்தர் பாடியுள்ளார்.

பெரும்பாலான மொழிகளின் உச்சரிப்பு நுனி நக்குடனே நின்றுவிடும் நிலையில் நம் தமிழ் மொழியில் உள்ள சொற்களின் உச்சரிப்புக்கள் மூலதாரத்தில் துவங்கி உச்சிவரை உள்ள நாளமில்லா சுரப்பிகளை தூண்டுவதாக உள்ளது.அதனால் தானோ என்னவோ பாடியுள்ளான் நம் பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!....என்று.

ஆனால் நம் தாய் மொழியின் சிறப்பு அறியாத பலரும் ‘டமில்’
என்று உச்சரிப்பதோடல்லாமல் அதைப் பெருமையாகவும் நினைக்கும் அவலநிலை என்று மாறுமோ?

Tuesday, 22 October 2013

மதத்தைக் காப்பாற்ற ..
மனித நேயத்தை மறக்கும்
மனம் இல்லா மனித ஜடங்கள்....
 

Saturday, 12 October 2013


Live your life as a human

Loving,caring and kind,

Spreading the waves of joy and harmony,

Shredding behind the banners of caste,color and creed,

Fulfilling the divine purpose,which you are called for,

And thats what you are here for...............VAZHGA VALAMUDAN!


May you Live your life like a tree,

blooming brightly all through your ways,

branching out in all goodness of life,

bearing fruits of love and kindness,

bringing down showers of blessings upon the earth,

providing shade to the down- trodden and

deep rooted in knowledge and wisdom.
May you live your life like a bird,
breaking off the shell facing life with confidence,
colorful and cheerful like a parrot,
singing joyfully like a cuckoo,
sharing like a crow,
flocking like a Gull,
stately like a peacock,
flying above the clouds like an eagle on gloomy days,
and facing the marathon of life like an ostrich.....